நீ இருந்திருந்தால் இந்த நாள் எல்லோரையும் போல் எனக்கும் 'அன்னையர் தினம்' ஆக இருந்திருக்கும்.
ஆனால், இவ்வுலகமெனும் சிறு வெளியைக் கடந்த பேராற்றலாய் என்னுடன் இருந்து என்னுள் இருந்து என்னை வழிநடத்தி மனிதனாய் இயங்கவைத்து உன் அருளால் எனக்குப் பெயரும் புகழும் வாழ்வும் வளமும் தரும் என் மதியாய் நீ என்றென்றும் இருப்பதால் இந்நாள் மட்டுமல்ல, எந்நாளும் எனக்கு உன் நாளே - உன்னாலே!
அனைவருக்கும் எனது இதயம் கனிந்த அன்னையர் தின வாழ்த்துகள்!
No comments:
Post a Comment