Saturday, February 15, 2025

உரிமைப் போராட்டக்காரர்கள் எல்லோருமே சுயமரியாதைக்காரர்களா?

தனது உரிமைகள் தனக்கு மேலே வைக்கப்பட்டோர்களால் பறிக்கப்படும் போது, உயிரைக் கொடுத்தாவது அவற்றை மீட்கப் போராடுபவனை உரிமைப் போராட்டக்காரன் எனலாம். ஆனால், தன்னைவிடக் கீழே வைக்கப்பட்டோரின் உரிமைகளை அவர்கள் அறியாதபோதும், அவற்றை அவர்களுக்குப் புரியவைத்து, அவர்களும் அந்த உரிமைகளை அடைய வழிவகை செய்பவனே சுயமரியாதைக்காரன்.

இருவருக்கும் ஒரு முக்கியமான வேறுபாடு உண்டு: பல நேரங்களில், தனது உரிமைகளுக்காக மட்டுமே போராடும் உரிமைப் போராட்டக்காரன், தனக்கு மேலே வைக்கப்பட்டோர்களுக்குச் சமமாக இருக்க வேண்டுமென்பதை விட, தானும் சிலருக்கு மேலாக இருக்க வேண்டியவன் என்பதையே நிறுவ விரும்புகிறான். ஆனால், சுயமரியாதைக்காரனோ, தன்னைவிடக் கீழே வைக்கப்பட்டவர்களும் தனக்குச் சமமானவர்களே என்பதை நன்கு அறிந்து, அவர்களும் அதனை உணர்ந்து, அவர்களது உரிமைகளை நிலைநாட்ட வழிவகை செய்து, ஏற்றத்தாழ்வு அற்ற ஒரு சமத்துவ சமுதாயத்தை உருவாக்குவதில் தன் பங்கை நேர்மையாக ஆற்ற முயல்கிறான்.

எனவே, உரிமைப் போராட்டக்காரர்கள் எல்லோருமே சுயமரியாதைக்காரர்கள் அல்லர் என்பதை உணர்வது நம் மதிக்கு நன்மை தரும்.

புரிய வேண்டியவர்களுக்குப் புரிவதற்காக எழுதுகிறேன்!

No comments: