Showing posts with label கற்பனை. Show all posts
Showing posts with label கற்பனை. Show all posts

Sunday, August 29, 2010

தேடித் தேடித் தொலைந்தவன்!

கவிதையெழுத ஆசைப்பட்டு பூங்காவுக்குச் சென்று
காகிதமும் எழுதுகோலும் எடுத்துவைத்துக் கொண்டு
கற்பனைக்காகக் காத்திருந்த நேரத்தில் - பாவம்
காதல் கவிஞன் காணாமல் போனான்!

Thursday, April 30, 2009

விதியும் வாழ்வும்!

கண்களுக்குள் எரியும்போதும் உறக்கந்துறந்து தொடரும்
உடல்முழுக்கக் கெஞ்சும்போதும் ஓய்வெடுக்க மறுக்கும்
கற்பனையில் பறக்கும்போது ஆற்றலுடன் விளங்கும்
உருவமற்ற மனமேநீ விதிப்பதுதான் எம்வாழ்வோ?