Showing posts with label ஆசை. Show all posts
Showing posts with label ஆசை. Show all posts

Wednesday, February 27, 2013

திங்கள்

திங்களுக்கோர் எண்ணப்பதிவை எழுதநினைத்துத் தொடங்கினேன்
திங்களன்று உவகையுடன் பள்ளிசெல்லும் மாணவனைப்போல்!
திங்களாய் மனவானின் ஓரத்தில் வளர்ந்துதேய்ந்தேயிருந்தாலும்
திங்களிறுதியில்தான் முழுநிலவுநாளோ என் கவிநிலவுக்கு?

Friday, December 31, 2010

புத்தாண்டு புது ஆண்டோ ?

புத்தாண்டு வாழ்த்துகளைப் பரிமாறிடும் நேரமிது - இரண்டாயிரத்து
பத்தாண்டு முடிந்திங்கு பதினொன்று தொடங்கும் வேளையிலே!
எவ்வாண்டின் துவக்கத்திலும் தோன்றும் ஆசைதான் இப்போதும் -
அவ்வாண்டை விடவோர் நல்லாண்டாய் இவ்வாண்டு வேண்டுமென்று!
ஆண்டாண்டாய் ஆண்டனுபவித்தும் ஏன் நமக்கு விளங்கவில்லை -
எண்ணால் வேறுபடும் ஆண்டனைத்தும் வினையால் ஓராண்டே என்று?

Sunday, August 29, 2010

தேடித் தேடித் தொலைந்தவன்!

கவிதையெழுத ஆசைப்பட்டு பூங்காவுக்குச் சென்று
காகிதமும் எழுதுகோலும் எடுத்துவைத்துக் கொண்டு
கற்பனைக்காகக் காத்திருந்த நேரத்தில் - பாவம்
காதல் கவிஞன் காணாமல் போனான்!