Showing posts with label எண்ணம். Show all posts
Showing posts with label எண்ணம். Show all posts

Saturday, December 28, 2013

நன்றியுள்ள நாய்க்குட்டி

இன்னா எண்ணுதலை இழிந்ததென்று உணர்த்தாது 
இந்நாளில் இவையெலாம் இயல்பென உரைக்கும் 
என் கயமையைக் கேட்டுப்பழகியபடியே வளர்ந்திடும் 
என் மனசாட்சியும் நன்றியுள்ளதோர் நாய்க்குட்டியே!

Wednesday, February 27, 2013

திங்கள்

திங்களுக்கோர் எண்ணப்பதிவை எழுதநினைத்துத் தொடங்கினேன்
திங்களன்று உவகையுடன் பள்ளிசெல்லும் மாணவனைப்போல்!
திங்களாய் மனவானின் ஓரத்தில் வளர்ந்துதேய்ந்தேயிருந்தாலும்
திங்களிறுதியில்தான் முழுநிலவுநாளோ என் கவிநிலவுக்கு?

Sunday, October 31, 2010

வேண்டுதல்

வராததை வருமென்று எண்ணியெண்ணி நிதம்நாடி
வந்ததை எல்லாம் விட்டுவிட்டுத் தேடியோடியதில்
வராத துன்பமெல்லாம் வந்தபின்னும் - அவ்வராததை
வந்திட வேண்டுதல் முறையோ?

Sunday, August 01, 2010

எண்ணம்

எண்ணும் எண்ணத்தை எண்ணி எண்ணியே
எண்ணம் போனதால் எண்ண வேண்டியவற்றை
எண்ணத் தவறிவிடும் எண்ணச்சூழல் ஏற்படின்
எண்ணமே தவறோ? எண்ணுபவர் தவறோ?

Tuesday, March 31, 2009

துன்பமும் பெருந்துன்பமும்!

ஏதாவதொரு வழிபிறக்காதா என்று தவித்துத் தேடும்போது
எதுவும் கிடைக்காமல் போவது துன்பமெனில்
ஏராளமாய் அடைந்த ஒன்றில் நிலைத்திட நினைக்கும்போது
எண்ணியதெல்லாம் கிடைக்கப் பெறுவது பெருந்துன்பமன்றோ?!