Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Saturday, December 09, 2017

கடவுளைச் சோதித்த வரம்!

நின் தவம்தனை மெச்சினோம் - 
வரமெது வேண்டும் என்று
தன் முகமெலாம் பெருமிதமது  
வழிந்திடக் கேட்டான் அவன்!

உன் படைப்பாம் இவ்வுலகில் 
வாழ்ந்தும் நான் மகிழ்ந்திட
என் இயல்பாம் இரக்கமதை 
வலிய இழக்க வேண்டும்!

ஆதலால் - வரமாய் நீயீந்த 
அன்புடை இதயமாம் இதை
ஈடாய் எடுத்துக் கொண்டு
இன்பமடைய விடு என்றென்!

படைத்தவன் மெல்லத் தலைகுனிந்தான் - 
விடையற்ற தன் நிலையுணர்ந்து!

- ஜ. விஜய் வெங்கட்ராமன்
09-12-2017

Wednesday, February 27, 2013

திங்கள்

திங்களுக்கோர் எண்ணப்பதிவை எழுதநினைத்துத் தொடங்கினேன்
திங்களன்று உவகையுடன் பள்ளிசெல்லும் மாணவனைப்போல்!
திங்களாய் மனவானின் ஓரத்தில் வளர்ந்துதேய்ந்தேயிருந்தாலும்
திங்களிறுதியில்தான் முழுநிலவுநாளோ என் கவிநிலவுக்கு?

Sunday, June 03, 2012

பிறந்தநாள் நன்றிக் கவிதை!

கொள்ளும் தனிமையில் கடவுளைக் காண்பவர்!
தன்ரசிகரைத் தனிமை கொல்லாமல் காப்பவர் - 
அவர்தம் பிறந்தநாளன்று வாழ்த்துமின்றி வணக்கமுமின்றி 
எண்ணத்தால் நிறைகிறேன் - நன்றியை நவில!

A simple man who enjoys isolation but (through his great compositions) has saved millions of his fans of three generations from being isolated, was born on this day, sixty-nine years ago! Celebrating his birthday in every possible way is a custom for some, means business for many but for us his fans, it is a calm genuine gesture of our heartfelt gratitude for him. May Ilaiyaraaja live amidst us to treat many more generations with his ever-flowing river of music!

நன்றி, தலைவா!


Sunday, August 29, 2010

தேடித் தேடித் தொலைந்தவன்!

கவிதையெழுத ஆசைப்பட்டு பூங்காவுக்குச் சென்று
காகிதமும் எழுதுகோலும் எடுத்துவைத்துக் கொண்டு
கற்பனைக்காகக் காத்திருந்த நேரத்தில் - பாவம்
காதல் கவிஞன் காணாமல் போனான்!