Showing posts with label வாழ்த்து. Show all posts
Showing posts with label வாழ்த்து. Show all posts

Sunday, February 19, 2023

வாழ்த்துக்கு நன்றி

இல்லறப் பிணைப்பில் இணைந்து 
ஆண்டுகள் பதினேழைக் கடந்த 
நல்வாழ்வு பதினெட்டில் நுழைய
அன்பு நூறாண்டு செழிக்குமென 

எங்களுக்குத் திருமண நாள் வாழ்த்து தெரிவிக்கும் நட்புகள் உறவுகள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியும் மகிழ்ச்சியும் 🙏🏼😊

- Vijay Venkatraman Janarthanan & Harrini Kumarakrishnan

Tuesday, January 31, 2023

என்னுடன் வாழ்கநீ நூறாண்டு!

என்னைத் தன்னுடன் இணைத்தும் 
என்னை நானென்ற இயல்புடனே 
என்னை என்னிற் சிறந்தவனாக்க 
என்னை என்றும் முயலவைக்கும் 

என்னவளே உனைப்போல் யாருண்டு? 
என்னுடன் வாழ்கநீ நூறாண்டு!

(31 ஜனவரி 2023 அன்று என் மனைவியின் பிறந்தநாளுக்கு வாழ்த்தாக எழுதியது)

Wednesday, January 11, 2017

கோவைக்கு ஒரு வாழ்த்து!

கோவையால் வாழ்ந்தோர் பலர் கோவையாய்க் 
கோவையைக் கைவிட்ட போதும் கோவாய்க் 
காக்கும் கோவை - பாவையரை மட்டுமின்றிப் 
பன்மொழி பேசும் அத்தனைக் கோவையரையும்!


பெண்களுக்குப் பாதுகாப்பான இந்திய நகரங்களுள் முதன்மையானதாகக் கோவை தேர்வுசெய்யப்பட்டதை முன்னிட்டு 11 ஜனவரி 2017 அன்று நான் எழுதியது இது.

செய்தி ஆதாரங்கள்:


Friday, February 28, 2014

திரையும் திறையும்

பனித்திரை சூழும் பண்புடை நாட்டுக்குப் 
பணித்திறை விலகாப் பற்றுடன் சென்றிட 
மனத்திரை திறந்து மகிழ்வோர் வாழ்த்தும்  
மணத்திறை போதுமே மதியுளோர் வெல்ல!

Wednesday, July 31, 2013

வாழ்த்து

வாழ்த்தென்றால் என்னவென்று வினவினான் நண்பன் - 
வாழ்கவெனும் சொல்லெல்லாம் வாழ்த்தோ என்றவாறே!
வாழ்த்தத்தயங்கா நானோ புன்னகைத்தபடி மறுத்தேன் - 
வாழ்த்தில் சிக்கலென்ன என்றுஅவன் மனம்வியக்கவே!

​அவர்பால் தன்னகத்தில் தோன்றும் உண்மையன்பைச்  
செல்வமாய் அவருணர உரைப்பதே வாழ்த்தென்றேன்!
அன்பில்லா ஒருவரின் பொய்நகையுடன் வெளிப்படும் 
செல்லாத சொல்லெல்லாம் வாழ்த்தல்லவே யென்றேன்!

Sunday, June 03, 2012

பிறந்தநாள் நன்றிக் கவிதை!

கொள்ளும் தனிமையில் கடவுளைக் காண்பவர்!
தன்ரசிகரைத் தனிமை கொல்லாமல் காப்பவர் - 
அவர்தம் பிறந்தநாளன்று வாழ்த்துமின்றி வணக்கமுமின்றி 
எண்ணத்தால் நிறைகிறேன் - நன்றியை நவில!

A simple man who enjoys isolation but (through his great compositions) has saved millions of his fans of three generations from being isolated, was born on this day, sixty-nine years ago! Celebrating his birthday in every possible way is a custom for some, means business for many but for us his fans, it is a calm genuine gesture of our heartfelt gratitude for him. May Ilaiyaraaja live amidst us to treat many more generations with his ever-flowing river of music!

நன்றி, தலைவா!


Friday, December 31, 2010

புத்தாண்டு புது ஆண்டோ ?

புத்தாண்டு வாழ்த்துகளைப் பரிமாறிடும் நேரமிது - இரண்டாயிரத்து
பத்தாண்டு முடிந்திங்கு பதினொன்று தொடங்கும் வேளையிலே!
எவ்வாண்டின் துவக்கத்திலும் தோன்றும் ஆசைதான் இப்போதும் -
அவ்வாண்டை விடவோர் நல்லாண்டாய் இவ்வாண்டு வேண்டுமென்று!
ஆண்டாண்டாய் ஆண்டனுபவித்தும் ஏன் நமக்கு விளங்கவில்லை -
எண்ணால் வேறுபடும் ஆண்டனைத்தும் வினையால் ஓராண்டே என்று?