தங்கப்பதக்கம்தனை என்னை நம்பி அணிவித்து அழகு பார்த்தபின் பந்தயத்தைத் துவக்கி வைத்து என்னை ஓடச் சொன்னது வாழ்க்கை. முதல் பரிசுக்கு உரியவன் தான் நானென நன்றியுடன் மெய்ப்பிக்க அயராது ஓடிக் கொண்டிருக்கிறேன் நான் - அடைய வேண்டிய ஆரம்பம் எங்கென்று அறியாது!
பொன்னின் இயல்பு - தன்னை அணிந்தவர்க்கு அழகூட்டி மதிப்பூட்டுவது! எந்நிலையிலும் இன்னொரு உலோகத்துடன் இணைவதால் பொன்னின் மதிப்பு உயர்வதுமில்லை; தாழ்வதுமில்லை. பொன்னே ஆயினும் சூரிய ஒளி அதன் மேல் படும் போது ஏற்படும் பிரதிபலிப்பின் வீச்சைக் கொண்டு தான் அதன் குன்றா வீரியத்தை நாம் உணர்கிறோம்.
எது அதன் மேல் பட்டாலும் படாவிட்டாலும் அது எப்போதுமே பொன்னாய்த் தான் இருந்திருக்கிறது என்பது மட்டும் சிலருக்குத் தான் புரிந்திருக்கிறது!