Thursday, October 31, 2013

தீர்ப்பு

தீர்ந்திடாத இன்னலும் தீர்ந்திட வேண்டித்
தீராததோர் இறையைத் தீர்வுக்கென நாடித்
தீர்க்கமாய் நம்பியும் தீரவில்லை இன்னல் -
தீர்ப்பதுதன் கையிலென்று உணராதோனுக்கு!

Monday, September 30, 2013

மதி

மதியென்று ஒன்றுளதே; அது யாதென்று
புதிதாய் வினவினேன் நண்பனிடம் இவ்வாறு:
"விண்ணின் மதியா? பெறும் வெகுமதியா?
பொன்னின் மதியா? தரும் பெருமதியா?"

தான்காணத் தன்விழி இருக்கப் பிறர்கருத்தையே
கண்ணாய்க் கொண்டு பார்வை வளர்ப்போரிடம்
இல்லாதது எதுவென்று சொல்லென்று கூறியவன்
ஈடிலாப் பொருள் தந்தான் என்மதிக்கு!

Tuesday, September 24, 2013

Why We Heed a Friend’s Advice More Than Others'

All of us would agree that accepting advice is generally difficult. But, why is advice a little more acceptable when it comes from one's good friend? I think it is because we trust that our friends, while being external of our problems, would step into our shoes and understand our points of view too, before advising us. And, we probably implicitly believe that they wouldn't get judgemental about us and would certainly count on us when they need help to counter their problems in future. After all, what is friendship but mutual emotional support between two compatible minds?

Saturday, August 31, 2013

கடவுள் ஏன் காணாமல் போனார்?

கடவுள் ஒரு நாள் என் முன்னே தோன்றினார்!
"என்ன வரம் வேண்டும்?" என்று என்னை வினவினார்! 
கண்ட காட்சியை நம்ப முடியா நான் கேட்டதை 
எண்ணி வியந்த படியே முடியா தென்று மறுத்தார்! 

"வேண்டியதைத் தராமல் வேறு என்ன தருவீர்?" என்றதற்கு
"அருள் தருவேன்; பிறருக்கு அருளும் மனம் தருவேன்;
வேண்டா வெறுப்பை மறந்து மகிழும் இதயம் தருவேன்;
அன்பை நகையாய் உன் அகத்துக்குத் தருவேன்" என்றார்!

மெல்லச் சிரித்த நானோ கடவுளைப் பார்த்துக் கேட்டேன்:
"ஒரு வரம் கேட்கச்சொல்லி பல வரங்கள் தருபவரே!
மெல்லிசையை ரசித்துணரும் குணம் வேண்டும் என்றேனே! - அந்த
ஒன்றைத் தந்தால் இத்தனை வரங்கள் வேண்டாமே!" என்று!

தோல்வியெனத் தோன்றியதோ என்னவோ, "வேறேதும் வேண்டுமா?" என்றார்!
"சற்றே சிந்திப்பீர்! பண்ணால்யாம் பெருமின்பமெலாம் உம்மால் தரத்தகுமோ?
தோழனாய்த் தோள்தர நல்லிசை விருப்பம் ஒன்றிருந்தால் அவ்விசையின்
சந்தத்துக்குச் சொல்போல் இவையெலாம் தாமே பின்வருமே!" என்றேன்!

சொல்லி முடித்துத் திரும்பிப் பார்த்த நான் அதிர்ந்தேன்!
சொல்லாமல் கொள்ளாமல் கடவுள் காணாமல் போயிருந்தார்!

Wednesday, July 31, 2013

வாழ்த்து

வாழ்த்தென்றால் என்னவென்று வினவினான் நண்பன் - 
வாழ்கவெனும் சொல்லெல்லாம் வாழ்த்தோ என்றவாறே!
வாழ்த்தத்தயங்கா நானோ புன்னகைத்தபடி மறுத்தேன் - 
வாழ்த்தில் சிக்கலென்ன என்றுஅவன் மனம்வியக்கவே!

​அவர்பால் தன்னகத்தில் தோன்றும் உண்மையன்பைச்  
செல்வமாய் அவருணர உரைப்பதே வாழ்த்தென்றேன்!
அன்பில்லா ஒருவரின் பொய்நகையுடன் வெளிப்படும் 
செல்லாத சொல்லெல்லாம் வாழ்த்தல்லவே யென்றேன்!

Sunday, June 30, 2013

பாடும் பாட்டும்!

பாடுபட்டு உழைத்தும் பாடுபடுத்தா குணத்தைப் 
பழகத்தான் இயலவில்லை - பாடுபடுத்தும் மனத்தால்! 
பாட்டைப் பழகியபின்னோ மனப்பாடு பறந்தது; 
பழகிய இசையாலே பாடுபடுத்தல் மறந்தது! 

Sunday, June 02, 2013

The Common Man's Classical Composer

The common man's one & only original global classical music composer in the truest sense, turns 70 today - only chronologically, of course! He is sure to remain ever youthful through his tunes and will reign as the undisputed king of his fans' minds, true to his name! May the rest of the world be blessed enough to comprehend the beauty of his creativity and enjoy its relevance to LIFE as a whole, as we do 🙂

Wishing many more Happy Returns of the Special Day to Maestro Ilaiyaraaja!