Wednesday, February 27, 2013

திங்கள்

திங்களுக்கோர் எண்ணப்பதிவை எழுதநினைத்துத் தொடங்கினேன்
திங்களன்று உவகையுடன் பள்ளிசெல்லும் மாணவனைப்போல்!
திங்களாய் மனவானின் ஓரத்தில் வளர்ந்துதேய்ந்தேயிருந்தாலும்
திங்களிறுதியில்தான் முழுநிலவுநாளோ என் கவிநிலவுக்கு?

Monday, February 04, 2013

Artistes and Society

Artistes are creative representatives of the global society. They are initially inspired by the society but some of them eventually grow to the stature of being capable of inspiring the society. Of course, they are indebted to the society for earning from it, as every other person is. However, it should be remembered that even that repayment from an artiste would be in the form of an art. Expecting artistes to perform social service in order to prove their commitment to the society may not be a crime but is definitely greed, especially when the ones who expect so do not perform even a minimal portion of their part.

Thursday, January 31, 2013

கறுத்ததோ என் கருத்து?

கருத்தினைப் பதித்திடப் பேருரிமையெனக்கு உண்டென்று
கருத்தினில் உதித்தகருவினை வளர்த்தேன் - குழந்தையாய்!
கருத்து கறுத்ததென்று கருத்துரைத்தனர் பலகருத்துடையோர் -
கருத்தால் நான்கருதியது கறுந்திணையன்று என்றுரைத்தும்
கறுத்ததென் உள்ளமென்று உலகெங்கும் எடுத்துரைத்தார்!
கறுத்தபணம் கண்டிராத என்வெற்றுப் பொருளகத்தால்தளரா
கறுத்தமனம் கொண்டிராத என்நலம் விரும்பிக்கூட்டமும்
கறுத்துத் தான்போனது - நீதியாலு(ளு)ம் ஆட்சியாலும்!

கருத்தாய்க் கறுத்ததை என்றோ வேறெங்கோ - நான்
கறுக்கியதால் தானோ இன்றெனக்குக் கருவறுத்தல்?

Friday, January 11, 2013

அவனுக்கு இன்னொரு பெயரும் உண்டு!

நமக்கு எல்லா நன்மைகளும் நிகழ வேண்டுமென நினைப்பவன்  - நலம்விரும்பி.
நமக்குத் தீமைகள்  நிறைய நேர்ந்திட வேண்டுமென விரும்புபவன்  - எதிரி

ஆனால், நம்முடனேயே இருந்து நமக்கு நல்லதே செய்வதாக வாக்களித்து, நம் ஆசையைகளையும் வளரவிட்டு, ஒரு குறிப்பிட்ட காலம் வரை சொன்னது போல் செய்தும் காட்டி, திடீரென ஒரு நாள் நம் எதிரி கூட நமக்கு இழைக்கத் தயங்கும் ஒரு கொடுந்துன்பத்தைத் தந்து நம்மைத் துடிக்கவும் தவிக்கவும் வைப்பவன் - நம்பிக்கைத் துரோகி

அவனுக்கு இன்னொரு பெயரும் உண்டு: கடவுள்.

Saturday, September 01, 2012

தன் இயல்பால் அமைவதன்றோ தன் வாழ்வு?

பொன்னின் இயல்பு - தன்னை அணிந்தவர்க்கு அழகூட்டி மதிப்பூட்டுவது! எந்நிலையிலும் இன்னொரு உலோகத்துடன் இணைவதால் பொன்னின் மதிப்பு உயர்வதுமில்லை; தாழ்வதுமில்லை. பொன்னே ஆயினும் சூரிய ஒளி அதன் மேல் படும் போது ஏற்படும் பிரதிபலிப்பின் வீச்சைக் கொண்டு தான் அதன் குன்றா வீரியத்தை நாம் உணர்கிறோம். 

எது அதன் மேல் பட்டாலும் படாவிட்டாலும் அது எப்போதுமே பொன்னாய்த் தான் இருந்திருக்கிறது என்பது மட்டும் சிலருக்குத் தான் புரிந்திருக்கிறது!

Saturday, June 30, 2012

புலராதோ நற்பொழுது?

அதிகாலை வேளையில் துயிலெழுந்ததும் முதல் வேலையாய் நுண்ணிய மென் சன்னல்களின் வழியே நெருப்பு நரியைப் பிடித்து அதன் முகநூலில் விழிக்கவில்லையெனில் புலராதோ நற்பொழுது நம் மக்களுக்கு?

Sunday, June 17, 2012

The Toughest Battle!

The battle is the toughest not when it is fought against one's dreaded enemies but when circumstances force one to fight against one's own loved ones.