Thursday, March 30, 2017

தாயருள் என்ன செய்யும்?

சாலச்சிறந்தோர் நடுவே சிறியோன் நானும் 
காலத்தே நின்றிடவோர் பேரிடம் தந்தது 
உழைப்புக்கும் திறனுக்கும் பருவம் தவறா 
மழையெனப் பலன்தந்த என் தாயருளே!

Immensely privileged to be representing India on the Editorial Board of Global Forum, the official magazine of the Drug Information Association (DIA)!

Sunday, February 05, 2017

Beware of Healers!

Doctors who believe in God say "I treat. God heals."

Doctors who don't believe in God say "I treat. Nature/Science heals."

There are some others who say "You don't need treatment. But, I'll heal you."

Beware of such 'HEALERS', for they claim to assure what even God or Nature/Science cannot guarantee at all times!

Let's educate ourselves on whom we can/should trust for which subject!

- Dr J Vijay Venkatraman

Wednesday, January 11, 2017

கோவைக்கு ஒரு வாழ்த்து!

கோவையால் வாழ்ந்தோர் பலர் கோவையாய்க் 
கோவையைக் கைவிட்ட போதும் கோவாய்க் 
காக்கும் கோவை - பாவையரை மட்டுமின்றிப் 
பன்மொழி பேசும் அத்தனைக் கோவையரையும்!


பெண்களுக்குப் பாதுகாப்பான இந்திய நகரங்களுள் முதன்மையானதாகக் கோவை தேர்வுசெய்யப்பட்டதை முன்னிட்டு 11 ஜனவரி 2017 அன்று நான் எழுதியது இது.

செய்தி ஆதாரங்கள்:


Thursday, May 12, 2016

Entrepreneurship: Entry & Exit Barriers

One's fear of failure might be their most important entry barrier to entrepreneurship but their degree of resilience to rejection is the key determinant of their exit barrier!

Saturday, January 09, 2016

போதைக்கு அடிமை நான்!

பன்னாட்டு மாநாடு எந்நாட்டில் நிகழ்ந்திடினும் 
தோழமையென வழங்கும் மதிநிறை மாலையிலே 
இம்மதுவோ அம்மதுவோ எம்மது தந்திடவென 
வினவிடும் அன்பரிடம் - மதுவேதும் பழகாதவன் 
நானென்றுரைக்க அவர் புருவங்கள் மேலெழும்பும் 
செயலெனக்குத்தரும் போதைக்கு அடிமை நான்!

Friday, January 02, 2015

தான்

தானாய் வரும் நன்மைதனைக் கடந்துத் 
தன்னால் நிகழும் நன்மை யாதென நினைந்துத் 
தானாய் வரும் தீமைதனைத் தவிர்த்துத் 
தன்னால் தீமை நிகழாதென மாந்தர்குலம் சூளுரைக்கத் 
தானாய்த் தோன்றிய இப்பாடலால் வேண்டினேன்
தன்னால் பூத்த அழகுப் புத்தாண்டு மலரை!

Sunday, March 30, 2014

அன்பின் நட்பும் நட்பின் அன்பும்

நட்பு எனக்கு அன்பு செய்ததால் அன்புக்கு நட்பானேன்;
அன்புடன் பழகப் பழகவே பல்கிப் பெருகியது நட்பு!
அன்பின் நண்பனென்றும் நட்பின் அன்பனென்றும்
நட்பும் அன்பும் எனைக்காத்துக் கொண்டாட,
வியந்து நின்றது வினை - என்னை 
வீழ்த்தும் வழி எதுவென்று அறியாது!

துன்பமெனும் அம்பை இறுமாப்புடன் எய்தது வினை; 
ஆறுதலால் உயிர்த்தெழச் செய்தது நட்பின் அன்பு!
துரோகம் கொண்டு நிலைகுலைக்க எண்ணியது வினை;
ஆதரவாய்க் கயமையை வென்றது அன்பின் நட்பு!
தாக்கவோர் ஆயுதமின்றித் திகைத்த வினை
தயங்கியே ஏற்றது தான் தோற்றதை!