Tuesday, September 29, 2009

பாடம்

நெருப்புக்கு ஒரு பாடம் கற்பிக்க முடிந்தால் கூறுவேன்:
குழந்தைகள் மீதுபட்டால் பனியாய்க் குளிர்ந்திடென்று!
நீருக்கோர் பாடம்சொல்ல இயன்றால் உரைப்பேன்:
பிள்ளைகள் மூழ்க நேர்ந்தால் நிலமாய் மாறிடென்று!
மண்ணிற்கென்று ஒரு பாடம் உண்டு: இளஞ்சிறார்கள்
விழுந்தால் பஞ்சாய் நெகிழ்ந்திடென்று! ஏனென்று
வினவினால் வினவுவேன்: பிஞ்சுகளுக்கு மனிதர்களால்
நிகழும் அபாயங்கள் போதாதாவென்று!