Monday, September 30, 2013

மதி

மதியென்று ஒன்றுளதே; அது யாதென்று
புதிதாய் வினவினேன் நண்பனிடம் இவ்வாறு:
"விண்ணின் மதியா? பெறும் வெகுமதியா?
பொன்னின் மதியா? தரும் பெருமதியா?"

தான்காணத் தன்விழி இருக்கப் பிறர்கருத்தையே
கண்ணாய்க் கொண்டு பார்வை வளர்ப்போரிடம்
இல்லாதது எதுவென்று சொல்லென்று கூறியவன்
ஈடிலாப் பொருள் தந்தான் என்மதிக்கு!