Sunday, August 29, 2010

தேடித் தேடித் தொலைந்தவன்!

கவிதையெழுத ஆசைப்பட்டு பூங்காவுக்குச் சென்று
காகிதமும் எழுதுகோலும் எடுத்துவைத்துக் கொண்டு
கற்பனைக்காகக் காத்திருந்த நேரத்தில் - பாவம்
காதல் கவிஞன் காணாமல் போனான்!

Sunday, August 01, 2010

எண்ணம்

எண்ணும் எண்ணத்தை எண்ணி எண்ணியே
எண்ணம் போனதால் எண்ண வேண்டியவற்றை
எண்ணத் தவறிவிடும் எண்ணச்சூழல் ஏற்படின்
எண்ணமே தவறோ? எண்ணுபவர் தவறோ?