நின் தவம்தனை மெச்சினோம் -
வரமெது வேண்டும் என்று
தன் முகமெலாம் பெருமிதமது
வழிந்திடக் கேட்டான் அவன்!
உன் படைப்பாம் இவ்வுலகில்
வாழ்ந்தும் நான் மகிழ்ந்திட
என் இயல்பாம் இரக்கமதை
வலிய இழக்க வேண்டும்!
ஆதலால் - வரமாய் நீயீந்த
அன்புடை இதயமாம் இதை
ஈடாய் எடுத்துக் கொண்டு
இன்பமடைய விடு என்றென்!
படைத்தவன் மெல்லத் தலைகுனிந்தான் -
விடையற்ற தன் நிலையுணர்ந்து!
- ஜ. விஜய் வெங்கட்ராமன்
09-12-2017