Saturday, December 09, 2017

கடவுளைச் சோதித்த வரம்!

நின் தவம்தனை மெச்சினோம் - 
வரமெது வேண்டும் என்று
தன் முகமெலாம் பெருமிதமது  
வழிந்திடக் கேட்டான் அவன்!

உன் படைப்பாம் இவ்வுலகில் 
வாழ்ந்தும் நான் மகிழ்ந்திட
என் இயல்பாம் இரக்கமதை 
வலிய இழக்க வேண்டும்!

ஆதலால் - வரமாய் நீயீந்த 
அன்புடை இதயமாம் இதை
ஈடாய் எடுத்துக் கொண்டு
இன்பமடைய விடு என்றென்!

படைத்தவன் மெல்லத் தலைகுனிந்தான் - 
விடையற்ற தன் நிலையுணர்ந்து!

- ஜ. விஜய் வெங்கட்ராமன்
09-12-2017