ஒருவரை நம்பியதனால் நான் அடைந்த ஏமாற்றத்தைப் பாடுபட்டு ஏற்றுக்கொண்டு அதனைக் கடந்து செல்லும் ஒவ்வொரு முறையும் அடுத்ததாக ஒருவரை நம்பும் வல்லமையை நான் கொஞ்சமேனும் இழக்கத் தான் செய்கிறேன். எனினும், "தான் நம்பப்படவில்லையே" என்ற ஆதங்கம் நாணயமுள்ள எந்த ஒருவருக்கும் என்னால் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற அக்கறையால் நான் மீண்டும் முன்முடிவற்று நம்பத் தொடங்குகிறேன் - நான் நம்ப விரும்புபவர்களை; ஏமாறுவதற்கு முன்னரே விழித்துக் கொள்ளும் பாடத்தைக் கற்றுத் தெளிந்து விட்டேன் என்ற என் நம்பிக்கையை மட்டும் துணையாகக் கொண்டு!
- ஜ. விஜய் வெங்கட்ராமன்
(25 ஜனவரி 2025)