Welcome to this page where you will find some of the articles that I had written and continue to write! Kindly post your valuable comments too!
Friday, October 12, 2018
ஆரம்பத்தை நோக்கி!
தங்கப்பதக்கம்தனை என்னை நம்பி அணிவித்து அழகு பார்த்தபின் பந்தயத்தைத் துவக்கி வைத்து என்னை ஓடச் சொன்னது வாழ்க்கை. முதல் பரிசுக்கு உரியவன் தான் நானென நன்றியுடன் மெய்ப்பிக்க அயராது ஓடிக் கொண்டிருக்கிறேன் நான் - அடைய வேண்டிய ஆரம்பம் எங்கென்று அறியாது!
Wednesday, June 06, 2018
அறுந்திடாது அறம்!
அறச்சீற்றத்துக்கும் வெறுங்கோபத்துக்கும் வேறுபாடு
அறியும் மதியுளோர் சிலரே!
அறச்சீற்றத்தைக் கொடும்வெறியென முரசறைக்கும்
அருமைக் பெருங்கயவரோ பலரே!
எனினும்....
....அறமற்றோர் அறம்பாட அறுந்திடாது அறம்!
Sunday, March 04, 2018
இளைப்பாறல்
நான் பங்கேற்க மாட்டேன் என்று மறுக்க எனக்கு வாய்ப்புத் தரப்படாத நீண்ட நெடியதொரு பந்தயமாயினும் மனம் தளராமல் அயராது ஓடிவந்த களைப்பில் ஒரு நொடி நின்று இளைப்பாறித் திரும்பிப் பார்த்தபோது உணர்ந்தேன்:
நான் கடந்து வந்த அத்தனை பேரும் நானே. என் முன்னே ஓடிக் கொண்டிருப்போரும் நானாகவே இருப்பரோ என்று எண்ணியபடியே ஓட்டத்தைத் தொடர்கிறேன்.
அடுத்த இளைபாறலுக்காக நிற்கும் போதேனும் கேட்டறிய வேண்டும் நான்:
இவர்களுள் எந்த நான் மெய்யான நான் என்பதை!
- நான் (Vijay Venkatraman Janarthanan)
Labels:
இளைப்பாறல்,
ஓட்டம்,
நான்,
பந்தயம்,
மெய்
Tuesday, February 13, 2018
சான்றோனின் துன்பம்
சான்றோனென அறியப்படுதலும் ஓர்துன்பமே - ஈன்றபொழுதின்
பெரிதுவக்கத் தாயில்லாத போழ்து!
- என் குறள்.
Subscribe to:
Comments (Atom)