Showing posts with label பந்தயம். Show all posts
Showing posts with label பந்தயம். Show all posts

Sunday, March 04, 2018

இளைப்பாறல்

நான் பங்கேற்க மாட்டேன் என்று மறுக்க எனக்கு வாய்ப்புத் தரப்படாத நீண்ட நெடியதொரு பந்தயமாயினும் மனம் தளராமல் அயராது ஓடிவந்த களைப்பில் ஒரு நொடி நின்று இளைப்பாறித் திரும்பிப் பார்த்தபோது உணர்ந்தேன்:

நான் கடந்து வந்த அத்தனை பேரும் நானே. என் முன்னே ஓடிக் கொண்டிருப்போரும் நானாகவே இருப்பரோ என்று எண்ணியபடியே ஓட்டத்தைத் தொடர்கிறேன்.

அடுத்த இளைபாறலுக்காக நிற்கும் போதேனும் கேட்டறிய வேண்டும் நான்:

இவர்களுள் எந்த நான் மெய்யான நான் என்பதை!

- நான் (Vijay Venkatraman Janarthanan)