Showing posts with label நன்மை. Show all posts
Showing posts with label நன்மை. Show all posts

Friday, January 02, 2015

தான்

தானாய் வரும் நன்மைதனைக் கடந்துத் 
தன்னால் நிகழும் நன்மை யாதென நினைந்துத் 
தானாய் வரும் தீமைதனைத் தவிர்த்துத் 
தன்னால் தீமை நிகழாதென மாந்தர்குலம் சூளுரைக்கத் 
தானாய்த் தோன்றிய இப்பாடலால் வேண்டினேன்
தன்னால் பூத்த அழகுப் புத்தாண்டு மலரை!

Friday, January 31, 2014

திறனாய்வு

தன்னை உணராது தன்திறன் அறியாது 
தன்னைத் தானே தாழ்த்தி உயர்த்தும் 
தன்மையால் நன்மை நேராதென்று உணரும் 
தன்மையே தாழ்வற்ற உயர்வான திறன்!