15 ஜூலை 2017:
வில்லின் அம்பால்வீழா மாவீரனும் அன்பிலாச்
சொல்லின் அம்பால் நிலைகுலைவான் எனில்
அறிக அவன்மனம் யாருக்கும் தீங்கிழைக்கா
சிறிய குழந்தையின் பேருள்ளமென்று!
15 ஜூலை 2019:
நிலைகுலைந்த அச்சிறிய குழந்தை அச்சத்தால் தன் பேருள்ளத்தைக் குறுக்கி மற்ற எவரையும் போல நமக்கென்ன என்ற நிலையினை மனம்வெதும்பி எட்டியபடியே தன்னலம் பேணத் தொடங்கிய பின் உலகம் அதனைப் பாராட்டிப் பறைசாற்றியது "நீ நன்கு வளர்ந்துவிட்டாய்" என்று!
No comments:
Post a Comment